K U M U D A M   N E W S

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி.. இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு பங்கேற்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

மீண்டும் மீண்டுமா.. டெல்லியில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் அவதி!

டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகியது. வியட்நாமில் எரிபொருள் நிரப்ப விமானத்தை தரையிறக்கியபோது தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

ஜூலை 21 முதல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்ரகுப்த சுவாமி கோயில் தேங்காய் கடை ரூ.30 லட்சத்திற்கு ஏலம்!

சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் தேங்காய், பூ, மற்றும் பழம் விற்பணை செய்யும் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 21 லட்சத்திற்கு மேல் ஏலம் போன நிலையில், தற்போது, சுமார் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் மாறி மாறி ஏலத்தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதால் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி – 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.

கோவிலில் இருந்த சிவலிங்கம் சிலை உடைப்பு..இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க் மேயர் தேர்தல்.. இந்திய வம்சாவளி வேட்பாளரை கடுமையாக சாடிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் பதவிக்காக போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு.. விசாரணை தீவிரம்!

ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்து எதிரொலி.. ஏர் இந்தியாவின் முன்பதிவு சரிவு

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.