K U M U D A M   N E W S

இந்தி

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

இந்திய U-19 அணியின் கேப்டனாக CSK வீரர்.. சுட்டிக்குழந்தை சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமையான இன்று, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) அணியினை அறிவித்துள்ளது. இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான போட்டிகள் ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்திற்கும் உளவு பார்த்தாரா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா...விசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விரைவில் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியா - மாலத்தீவு இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனை.. முதல் முறையாக 90 மீட்டர் தாண்டிய நீரஜ் சோப்ரா!

இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

நாளை விண்ணில் பாய்கிறது.. பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்‌ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

இராணுவத்தில் உயர்பதவி.. கெளரவ லெப்டினன்ட் கர்னலாகிறார் நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில், கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவை தொந்தரவு செய்யும் டிரம்ப்... ஆப்பிள் CEO-விடம் டிரம்ப் பேசியது என்ன?

கத்தார் தலைநகர் டோகாவில் நடந்த ஒரு வணிக நிகழ்வில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உடனான உரையாடலின் போது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று கோரியதாக தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.