K U M U D A M   N E W S

76-வது குடியரசு தினம்.. தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் மரியாதை

சென்னையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

"நாடகத்திற்காக மேலூர் மக்களை முதல்வர் சந்திக்கிறார்" - செல்லூர் ராஜூ

"தமிழக அரசு சுரங்கம் வேண்டாம் என கூறவில்லை"

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.. நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.

மொழிப்போர் தியாகிகள் தினம்: தாளமுத்து, நடராசன் நினைவிடம் திறப்பு

மொழிப்போரில் உயிர்நீத்த தாளமுத்து, நடராசன் இருவரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணம்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார். 

அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சருடன் இன்று சந்திப்பு? 

டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்க வருகை.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

"இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" -முதலமைச்சர்

வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.

முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.

பரந்தூர் விவகாரம்.. அரசிற்கு லாபம் இருக்கிறது.. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி- விஜய் ஆதங்கம்

பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. வழக்கறிஞர்கள் அணி காவல் அணி.. ஸ்டாலின் பெருமிதம்

திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த  திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி என்று சட்டத்துறை மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பெரியார்-அம்பேத்கரை நேர்கோட்டில் நிறுத்தாதவர்களை மூளை உள்ளவராக கருதக்கூடாது- ஆர்.ராசா

பெரியாரையும், அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது என்று திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா தெரிவித்துள்ளார்.

வீட்டில் குடியிருப்போருக்கு எழுந்த சிக்கல்

இரு குடும்பங்களும் வீட்டை காலி செய்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஞானசேகரன் வீடு.. இந்து அறநிலையத்துறை கொடுத்த காலக்கெடு

ஞானசேகரன் வீட்டில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் அவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காலக்கெடு கொடுத்துள்ளனர்.

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டில் விழுந்து சிறுமி பலி.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி- க்கு மாற்றக் கோரி சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும்- சசிகலா ஆதங்கம்

எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது.. மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம்- சசிகலா

ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை புறக்கணிப்பு என்பது தவறானது எப்போதும் மக்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிக்கிறது- மோடி பெருமிதம்

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும்  பாரம்பரியத்தின் சாரத்தைப்  பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காவி உடை தரித்த திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் தினம் - முதலமைச்சர் மரியாதை

திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

UGC NET 2024: மத்திய அரசிற்கு இதுவே வாடிக்கையாகிவிட்டது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.