K U M U D A M   N E W S

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு

அரசு வேலை வாங்கித்தருவாத கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.. முதல்வரை சாடிய எடப்பாடி பழனிசாமி!

நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த விடியா திமுக முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவைக்கு திமுக செய்த நலத்திட்டங்கள் என்ன..? மேடை போட்டு விவாதிக்க தயாரா..? சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி

 கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார். 

ஒத்தைக்கு ஒத்தை பேசலாம் வாங்க.. திமுகவுக்கு நேரடி அழைப்பு விடுத்த எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி‌.ஆர் இன்னும் 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.  சூலூர் அடுத்த கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார்..

மதுவிலக்கு மாநாடு.. பாராட்ட ஆளில்லை.. திருமாவளவன் வேதனை!

கூட்டணியில் இருந்து கொண்டு மதுவிலக்கு மாநாட்டை நடத்த இருக்கிறாரே என பாராட்ட ஆளில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மகன், மருமகனுக்கு மட்டும்தான் பதவி.. திமுகவை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்!

திமுகவில் மகன், மருமகன் உள்ளிட்டோருக்கு மட்டுமே தலைவர் பதவி கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியில் புகைச்சல்..எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

திமுக கூட்டணியில் ஆரம்பித்துள்ள புகைச்சல் விரைவில் பற்றி எரியும் என கூட்டணி இல்லை என்றால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை... இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் கேள்வி

அனைத்து சாதி அர்ச்சகர்களை அவமரியாதை செய்துள்ள திமுக அரசு, பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ வீட்டில் திருமணம்.. முதல்வருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த துரை வைகோ!

Durai Vaiko Dughter Wedding Invitation To CM Stalin : இயக்கத் தந்தை தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்து முதல்வர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வர் அண்ணன் தளபதியின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்

சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாம்பலம், திருவல்லிக்கேணி,கோவை ஆகிய ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

”இதனால் திமுகவின் சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும்” - கடம்பூர் ராஜு கடும் தாக்கு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

’திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் ரெடி’..அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு!

''மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியபோது கூட்டணிக் கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால் வெற்றி பெற்றோம். தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்'' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#BREAKING : துணை முதலமைச்சராகும் உதயநிதி.. வெளியானது உறுதியான தகவல்

Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. நேற்று அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

EPS Case Update : தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இபிஎஸ் ஆஜராவதில் இருந்து விலக்கு

Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடனுக்காக வழிப்பறி கொள்ளையில் இறங்கிய போலீஸ்.. சிக்கிய அதிமுக நிர்வாகியின் மகன்

13 லட்ச ரூபாய் கடனுக்காக, ஹவாலா பணம் எடுத்து வருபவரை நோட்டமிட்டு நண்பனோடு சேர்ந்து வழிப்பறியில் ஈடுப்பட்ட முதல்நிலை காவலரையும், அதிமுக நிர்வாகியின் மகனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

#JUSTIN : TNPSC Group - 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - EPS வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு மூலம் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் வெறும் 6,244 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளது . குரூப்-4 தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

விசிக மது ஒழிப்பு மாநாடு: "வேடிக்கையான ஒன்று.." என செல்லூர் ராஜூ விமர்சனம்

மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? - "குடும்ப அரசியலின் உச்சம்.." - அதிமுக வைகைச் செல்வன்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது குடும்ப அரசியலின் உச்சம் என அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் விமர்சனம்

Anti Labour Scheme : தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anti Labour Scheme in Tamil Nadu : விடுமுறைக் கால சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படியே: தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி கொள்கை வேறு, தேசிய மது விலக்கு கொள்கை வேறு... திருமாவளவன் விளக்கம்!

திமுக-வை உட்கார வைத்து எப்படி மாநாடு ஒழிப்பை பேசுவீர்கள்? நாங்கள் பேசுகிறோமா? இல்லையா? என்பதை மாநாட்டின்போது பாருங்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin : அவசர ஆலோசனை ஏன்..? உதயநிதி விளக்கம்

Minister Udhayanidhi Stalin About Deputy CM : துணை முதலமைச்சர் பதவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். திமுக பவளவிழா குறித்தே இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்  

ஸ்டாலினும் உதயநிதியும் மேடையில்.... மூத்த அமைச்சர்கள் காலடியில்... ஆர்.பி.உதயகுமார் சரமாரி பேச்சு!

RB Udhayakumar Criticize Udhayanidhi Stalin : முப்பெரும் விழா மேடையில் உதயநிதியை மேடையில் உட்கார வைத்துவிட்டு கீழே மூத்த அமைச்சர்களை உட்கார வைத்துள்ளனர். திமுகவின் சுயமரியாதை, சமதர்மம் எங்கே போனது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.