K U M U D A M   N E W S

உலகம்

ஓமனில் தலைகீழாக கவிழ்ந்த எண்ணெய் கப்பல்.. 8 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

எண்ணெய் கப்பல் மூழ்கிய பகுதியில் பயங்கரமான கடல் கொந்தளிப்பும், கடுமையான காற்றும் வீசியதால் மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் இந்திய மற்றும் ஓமன் கடற்படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா.. அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்க முடிவு?

US President Joe Biden : 'கொரோனா காரணமாக ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார்' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வன்முறையில் முடிந்த இடஒதுக்கீடு போராட்டம்... 6 மாணவர்கள் பலியான சோகம்!

Students Protest In Bangladesh : மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் ஷேக் ஹசினா, எதிர்க்கட்சியினர் தங்களின் சுயநலத்துக்காக மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஓமனில் நடுக்கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்.. 13 இந்தியர்களின் கதி என்ன?

Oil Tanker Capsized In Oman : எண்ணெய் கப்பலில் இருக்கும் கேப்டன் உள்ளிட்ட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் கப்பலில் இருக்கும் 13 இந்தியர்கள் உள்பட 16 பேரின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்ட 20 வயது இளைஞர்.. யார் இந்த மேத்யூ க்ரூக்ஸ்? என்ன காரணம்?

படிப்பில் சிறந்து விளங்கிய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்த படிப்புக்காக விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இவரது பின்புலத்தை ஆராய்ந்து FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு: காதை உரசிச்சென்ற குண்டு.. என்ன நடந்தது?.. டொனால்ட் டிரம்ப் விளக்கம்!

''சம்பவம் நடந்தவுடன் விரைவாக என்னை பாதுகாத்த பாதுகாப்பு படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆதரவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்''

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை... அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

''அமெரிக்க ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இந்த சம்பவத்தில் டிரம்புக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது''

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... மருத்துவமனையில் அனுமதி.. அமெரிக்காவில் பரபரப்பு!

மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தததால் பரபரப்பு நிலவியது.

மனிதாபிமானமற்ற இஸ்ரேல்...அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல்... 71 பேர் பலியான சோகம்!

மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர்... ஆஸ்திரியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியும், கார்ல் நெக்மரும் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.