K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

#JUSTIN: வீட்டிற்குள் சிக்கித் தவித்த மூதாட்டி.. பத்திரமாக மீட்ட போலீசார் | Kumudam News 24x7

சென்னை ராமாபுரத்தில் வெள்ளநீர் புகுந்த வீட்டுற்குள் சிக்கித் தவித்த 85 வயது மூதாட்டி மீட்பு.

பாகிஸ்தானில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பாகிஸ்தான் சிறுமிகள்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

சென்னை மக்களே... எச்சரிக்கை.. தொடரும் ரெட் அலர்ட்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

மயிலாப்பூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்... அரசு மீது குற்றம் சாட்டும் மக்கள்

சென்னை மயிலாப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

சதுரகிரி ஓடையில் வெள்ளப்பெருக்கு... திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்..

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ரயில் தண்டவாளத்தில் விழுந்த மரம்.. தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை பாதிப்பு

ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரங்களை குரோம்பேட்டை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் ரயில் போக்குவரத்து சீரானது.

#JUSTIN: பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு உபகரணங்கள் | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.

#JUSTIN: அடித்து நொறுக்கிய கனமழை; வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள் | Kumudam News 24x7

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன் ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

#JUSTIN: வடகிழக்கு பருவழை: சென்னையில் இயல்பை விட 81% அதிகம் - வானிலை ஆய்வு மையம் | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் வழக்கத்தை விட 84 சதவிகித மழைப்பொழிவு அதிகம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

#JUSTIN: வடகிழக்கு பருவமழை; கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Kumudam News 24x7

#JUSTIN: வடகிழக்கு பருவமழை; கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Kumudam News 24x7

Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 15-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 15-10-2024 | Kumudam News24x7

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர்.. பழுதான வாகனங்கள்

சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சென்ற வாகங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையவழி வகுப்புகள் நடத்தக் கூடாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் கனமழை முடியும் வரை இணைய வழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

அறுந்து விழுந்த மின்கம்பி.. மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு ராஜ வீதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 24 வயது நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை எதிரொலி; சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் கனமழை காரணமாக 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

அறுந்து விழுந்த மின்கம்பி.. 4 மாடுகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அருகே மூலச்சேரியில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் உயிரிழந்தன. மாட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 

கொட்டித் தீர்க்கும் கனமழை... மழைநீரோடு கழிவுநீர் கலக்கும் அவலம்

சென்னை முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் பெரம்பூர் நெடுஞ்சாலை ஜீவா ரயில் நிலையம் அருகே கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதை உடனடியாக சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை எச்சரிக்கை... மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

வடகிழக்கு பருவமழை... முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை..

சென்னையின் புரசைவாக்கம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். 

கொட்டி தீர்த்த கனமழை.. தேங்கிய மழைநீர்.. பொதுமக்கள் அவதி

கனமழையில் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

3 வேளையும் உணவு... சென்னை மாநகராட்சியின் ஏற்பாடு...

சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.