#JUSTIN || வைகையில் மாறும் நிலை - மதுரை மக்களே ரெடியா..!! | Kumudam News 24x7
மதுரையில் கனமழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மதுரையில் கனமழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-10-2024 | Mavatta Seithigal
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7
மழை வெள்ளம் காரணமாக கண்காணிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கு, வி.ஏ.ஓக்கள்.
திருப்பதியில் கனமழை காரணமாக ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை நாளை வரை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள 30 அடி உயர மரம் வேரோடு சாய்ந்ததில் 2 கார் சேதமடைந்தது.
மழைநீர் சூழ்ந்ததால் குளம்போல் காட்சியளிக்கும் சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பளி வளாகம்.
ஸ்டெர்லைட் வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் ஜீவா ரயில் நிலையம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர்.
வேளச்சேரி பாலத்தைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தின் இருபுறங்களிலும் ஆட்டோ, கார், வேன், மினி பேருந்து என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கோதுமை, துவரம்பருப்பு, கடுகு, பார்லி உள்ளிட்ட 6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அமைச்சரவை நிர்ணயித்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை பாராளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்பியாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்லாத எம்பி சு வெங்கடேசனை கண்டா வரச் சொல்லுங்க என அப்பகுதி மக்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பதியில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில், மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை மாதவரம் வடதிருப்பாக்கம், வடகரை ஆகிய முக்கிய சாலைகளில் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் பெய்து வந்த கனமழை ஓய்ந்தும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதால் அரசு உடனடியாக இதை சீர் செய்து தர வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மஞ்சக்குட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதையடுத்து வரிசையாக மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் அருகே உள்ள கண்மாய்களும் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.