K U M U D A M   N E W S

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர்.. பழுதான வாகனங்கள்

சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சென்ற வாகங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"நெனச்சா பயமா இருக்கு.. கஷ்டப்படுவதே தலையெழுத்து" - ஆட்டோ ஓட்டுநர் வேதனை

சென்னை சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அவதி அடைந்து வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இணையவழி வகுப்புகள் நடத்தக் கூடாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் கனமழை முடியும் வரை இணைய வழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

அறுந்து விழுந்த மின்கம்பி.. மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

காஞ்சிபுரத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு ராஜ வீதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 24 வயது நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Chennai Red Alert: சென்னைக்கு இன்றே ரெட் அலர்ட்..! இயல்பை விட 81% கூடுதலாக மழை... மக்களே உஷார்!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் இயல்பை விட 81% அதிகம் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை எதிரொலி; சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னையில் கனமழை காரணமாக 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

அறுந்து விழுந்த மின்கம்பி.. 4 மாடுகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அருகே மூலச்சேரியில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் உயிரிழந்தன. மாட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 

24 மணி நேரத்தில் எங்கேயும் மின்தடை இல்லை... களத்தில் குதித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எங்கேயும் மின் தடை இல்லை என்றும் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.