K U M U D A M   N E W S

இன்றைக்கு மழை பெய்யுமா? சென்னை வானிலை மையம் கொடுத்த தகவல்!

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்.22) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி பள்ளி சுவற்றில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டர்.. பள்ளி நிர்வாகம் அதிரடி புகார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

தவெக மாநாடு நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யும் வகையில் அக்கட்சியினர் குடியாத்தம் அரசு பள்ளி சுவற்றில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்டர்களை அகற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முடங்கிய பெங்களூர்.. பேய் ஆட்டம் ஆடிய மழை

பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் மூழ்கின. குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

Thalapathy 70: கமல் – அட்லீ கூட்டணியில் தளபதி விஜய்... இப்படியொரு சம்பவத்த யாருமே எதிர்பார்க்கலல?

அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன், சல்மான்கான் நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தளபதி விஜய்யும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” - யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அமைச்சர் உறுதி

குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"இர்ஃபானை மன்னிக்க முடியாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் நகைகள் கொள்ளை - பகீர் வீடியோ வெளியீடு

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உணவக உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அணை நீர்வரத்து அதிகரிப்பு.. 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்... வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு... ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..?

அமைச்சர் ராஜகண்ணப்பன் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.