K U M U D A M   N E W S

BREAKING | முட்புதரில் மயங்கி கிடந்த மூதாட்டி.. பாவமே பார்க்காத 2 கொடூரன்கள் - வெளிவந்த திக் திக் பின்னணி...!

தென்காசி சங்கரன்கோவிலில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூதாட்டியை வாகைக்குளத்தில் கொண்டுவிடுவதாக கூறி அழைத்துச் சென்ற மர்மநபர்கள். பைக்கில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற 2 பேர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

'முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்’.. அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு!

''நான் நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். உங்களின் (மக்கள்) வாக்குகள் தான் எனது நேர்மையை நிரூபிக்கும் சான்றிதழ்'' என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

#BREAKING | நிலச்சரிவு - முதற்கட்டமாக 5 பேர் மீட்பு

தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் 30 பேரும் சிக்கித் தவிப்பு. முதற்கட்டமாக 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது

BREAKING | முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கெஜ்ரிவால் அறிவிப்பு

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. அடுத்த 48 மணி நேரத்தில் புதிய முதலமைச்சர் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் பேச்சு

#justin || சிபிஎம் அலுவலகத்தில் முதலமைச்சர்

சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.

’பாமக சாதிக்கட்சி என்றால், விசிக என்ன கட்சி?’.. திருமாவளவனுக்கு அன்புமணி பதிலடி!

''நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

#justin || த.வெ.க தலைவர் விஜய் ஓணம் வாழ்த்து

மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் - தமிழ் மற்றும் மலையாள மொழியில் ஓணம் வாழ்த்துகளை தனது X தளத்தில் விஜய் பதிவிட்டுள்ளார்

#JUSTNOW | அண்ணா உருவப்படத்திற்கு இபிஎஸ் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்தினார்

அரிதாரம் டூ அவதாரம்...மஹாவிஷ்ணு சுய புராணம்!

அரிதாரம் பூசும் சினிமாவில் தோற்றதால், ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் எடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாராம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் மஹாவிஷ்ணு. அரிதாரம் டூ அவதாரம் என மாறியிருக்கும் மஹாவிஷ்ணுவின் புராணம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...

#JUSTNOW | அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை: தொடர் விடுமுறை என்பதால் அண்ணாமலையார் கோயிலில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க அதிகாலை முதலே குவிந்த அசைவப் பிரியர்கள். நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வந்த மக்கள்

திருமாவளவன் விவகாரம்: 'எல்லாம் அவர் பார்த்துப்பார்’.. சேகர்பாபு பதில்!

''முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது'' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

LIVE : சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி

சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாடு முழுவதும் கட்சி பாகுபடின்றி அண்ணாவின் பிறந்தநாளை திமுக, அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அண்ணாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'மெய்யழகன்' படம் பார்த்தால் கண்டிப்பா மன்னிப்பு கேட்ப்பீங்க.. 100% உறுதியாக சொன்ன இயக்குனர்

'மெய்யழகன்' படம் பார்த்தால் கண்டிப்பா மன்னிப்பு கேட்ப்பீங்க.. 100% உறுதியாக சொன்ன இயக்குனர்

LIVE : பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்

"சத்தமே இல்ல.." க்யூட்டாக கேட்ட ஸ்ரீ திவ்யா..!தொண்டை கிழிய கத்திய ரசிகர்கள்

"சத்தமே இல்ல.." க்யூட்டாக கேட்ட ஸ்ரீ திவ்யா..! தொண்டை கிழிய கத்திய ரசிகர்கள்

#JUSTIN | முதலமைச்சர் ஓணம் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள மலையாள மக்களுக்கு இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அச்சச்சோ! வெறும் 1 செ.மீட்டரில் கோப்பையை நழுவ விட்ட நீரஜ் சோப்ரா.. ரசிகர்கள் ஆறுதல்!

காலில் ஏற்பட்ட காயம், போட்டி நடந்த பிரசல்ஸ் நகரில் நிலவிய கடும் குளிர் ஆகியவை நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் விடாமுயற்சியுடன் தீரத்துடன் போராடி வெறும் 1 சென்டிமீட்டரில் தான் வெற்றியை அவர் நழுவ விட்டுள்ளார்.

”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்

”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசல் - பாதுகாப்பு பணியில் போலீசார்

“5 நிமிஷம் டச் பண்ணிக்கிறேன்” சிறுமியிடம் சில்மிஷம்... சிக்கிய இச்சை பார்ட்டி..!

ஆண் நண்பருடன் சென்றதை வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி சிறுமியிடம் தனது பாலியல் இச்சையைத் தீர்க்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அம்மாவிடம் சொல்லி விடுவேன்... 5 நிமிஷம் தொட்டுக்கிறேன் என்று இளைஞர் பேசி மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னைவாசிகள் கவனத்துக்கு.. புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே முக்கிய அறிவிப்பு! விநாயகர் சிலை ஊர்வலம் - இந்த பக்கம் போகாதீங்க..

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்காக கொண்டு வரப்படும். இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

#JUSTIN || ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு. நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 17,000 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 18,000 கன அடியாக உயர்வு