மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19-10-2024 | Mavatta Seithigal
சிவகார்த்திகேயன் குறித்து பிளடி பெக்கர் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கவின்.
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கொடியில் யானை சின்னம் பயன்படுத்தியது குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டு விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.
கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு.
தவெக கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்றவில்லை எனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் கவின் நடிப்பு குறித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேசியது வைரலாகி வருகிறது.
சென்னை தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி வார நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த சிறிய தவறுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வளவு சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் என்றும் கலக்கப் போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் நீட் பயிற்சி மைய விடுதி அனுமதி இல்லாமல் செயல்படுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்கக்கோரி சமூக நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
35 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாமக கொடி கம்பத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் அபகரித்ததால் பாமக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தனர்.
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அதனை முழுவதுமாக குணப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷா ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர்.
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 19) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.