டி.ஐ.ஜி ராஜலட்சுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தது சிபிசிஐடி
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் நேரடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் நேரடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தைப் பிறப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நான் சொன்னால் சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 2,910 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 வரை சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நாளை மறுநாள் வங்கக் கடலில் உருவாகும் டானா புயல், தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ED அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமில் வெளிவந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கவும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடர் மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கொட்டகுடி ஆற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 85.24 கன அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அமராவதி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.
மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வண்ணாரப் பேட்டையில் போதையில் ரகளை செய்த திமுக வழக்கறிஞரைக் கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு காவலர்களிடம் மதுபோதையில் தம்பதியினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடவுள்ள நிலையில், சோனியாவும் ராகுலும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.109க்கு விற்பனையாகிறது.