K U M U D A M   N E W S

சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்? - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம் எல் ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நியோமேக்ஸ் மோசடி வழக்கு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

டீ குடிப்பதால் எதுவும் மாறாது.. சரளமாக பொய் சொல்கிறார்கள்.. சசிகலா தாக்கு

தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு தங்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாலேயோ எதுவும் மாற போறதில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

நின்றபடியே துடித்த பூசாரி.. எமனாக பிடித்துக்கொண்ட கரண்ட்.. வெளியானது நடுங்க வைக்கும் சிசிடிவி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர். 

This Week OTT Release: லப்பர் பந்து மட்டும் மிஸ்ஸிங்... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.

UGC NET Results 2024 : யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

UGC NET Results 2024 Date : நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  

IRCTC Booking: ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் காலம் திடீரென குறைப்பு... இனி எத்தனை நாட்களில் முன்பதிவு?

IRCTC Ticket Booking Period Days Update News : ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை, 120 நாட்களில் இருந்து குறைத்து ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாரி முழுக்க பேராபத்து!! - அதிகாரிகளே மிரண்ட தருணம்.. உள்ளே இருந்தது என்ன தெரியுமா..?

புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1000 கிலோ நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.  

தீபாவளிக்கு முன்கூட்டியே வந்த இனிப்பு செய்தி.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

போலீஸார் பேச்சை கேட்காத மாணவர்கள்.. ராட்சத அலையில் சிக்கி பலியான பரிதாபம்

மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற ஏழு மாணவர்களில் இரண்டு மாணவர்களை கடலலை இழுத்துச் சென்றதையடுத்து, ஒருவர் இறந்த நிலையில் மீட்டதையடுத்து, மற்றொருவருக்கு தீவிர சிகிச்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்... மக்கள் பீதி

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள்... நீக்கப்பட்டதுதான்... உதயநிதி பதிலில் முதிர்ச்சியில்லை” EPS ஆவேசம்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

IND vs NZ 1st Test Match 2024 : 5 வீரர்கள் டக் அவுட்.. 46 ரன்களுக்கு ஆல்-அவுட்.. இந்திய மண்ணிலேயே இதுதான் மோசம்

IND vs NZ 1st Test Match 2024 Highlights : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுக தள்ளாடிருக்கும்.. ஆனால் தப்பிச்சுருச்சு... ராஜன் செல்லப்பா விமர்சனம்!

வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும். வெள்ளத்தை வைத்து சிலர் வணிகம் செய்வது உண்டு. அதை யாரும் செய்து விடக்கூடாது என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Sanjiv Khanna: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... சஞ்சீவ் கன்னாவை முன்மொழிந்த சந்திரசூட்!

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். 

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. 

களத்தில் முதலமைச்சர்.. சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

கவரைப்பேட்டை ரயில் விபத்து... 25 பேருக்கு பறந்த சம்மன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக 25 பேருக்கு வழங்கப்பட்ட சம்மன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Actor Karthik: நவரச நாயகனுக்கு திடீர்ன்னு என்னாச்சு..? கார்த்திக் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்!

நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கார்த்திக், மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கார்த்திக்கின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அப்டேட் கொடுத்துள்ளனர்.

தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்

 காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.