பதவி பித்துப் பிடித்த தலித் அமைப்புகள்.. அரசியல் பசிக்கு இரையாகி விட்டோம்.. கிருஷ்ணசாமி
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7ம் தேதி, பழநி அடிவாரம் கிரிவீதியில் நடைபெற உள்ளது.
சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை அண்ணாநகரில் கூவம் ஆற்றில் பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தையின் உடல் மிதந்து வந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பச்சிளம் சிசுவை கூவம் ஆற்றில் வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
யாரோ எழுதிய வசனத்தையும், பாடலையும் பாடி, வசனம் பேசியவர் விஜய் என்றும் அவருக்கு அரசியல் அறிவு கிடையாது என்றும் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 02) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழா யாக பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்
உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இருந்து அவர் தனது முதல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
அண்மையில் வந்த ‘கோட்’ திரைப்படத்தில் வில்லனும் கதாநாயகனும் விஜய்யாகவே இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதனால்தான் விஜய் தமிழ் தேசியமும் திராவிடமும் இரண்டும் ஒரே கொள்கை என்று நினைத்து விட்டார்“ என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.