பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. நீடித்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் தனது X தளத்தில் பதிவு
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. நீடித்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் தனது X தளத்தில் பதிவு
''நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 17-09-2024
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து. உடல்நலம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக விஜய் தனது X தளத்தில் பதிவு
வாழை திரைப்படத்தின் வெற்றி விழாவில் அம்மாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்
சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலத்தை தாண்டி செப்டம்பர் மாதத்திலும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எல்.முருகனிடம் கேட்டபோது, ‘இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முறையாக எடுப்போம்’என்றார்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு மின்கட்டண உயர்வை திரும்பப்பெறவில்லை என்றால் அதிமுக சார்பில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.
பலதரப்பட்ட ஆதிக்கத்திற்கு எதிராக சமரசமின்றி களமாடிய போராளியான தந்தை பெரியாரை அவரது 146வது பிறந்த தினத்தில் நினைவுக்கூறுவோம்..
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால். இன்று காலை ஆம் ஆத்மி MLA.க்கள் கூட்டம்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா-முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் விருது எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட உள்ளது.
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள். பத்திரமாக மீட்கப்பட்ட 30 தமிழர்கள்
நேற்று நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 17-09-2024
ஸ்டாலின் - திருமா சந்திப்பில் நடந்தது இதுதானா..? | Kumudam News24x7 | DMK | VCK | Thiruma | CMstalin
பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் இளைஞர், சிறுவனை தாக்கியதாக எழுந்த புகார் - புதிய சிசிடிவி வெளியீடு.. "தாக்குதல் நடத்தியவர்கள் சிறு வயது என்பதால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என நினைத்து புகாரளிக்கவில்லை" என பாடகர் மனோ மனைவி கோரிக்கை
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 16-09-2024
ககன்யான் திட்டத்தை 2 ஆண்டிற்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டம். விண்வெளிக்கு ஆராய்ச்சிக்கு தனியார் ஒத்துழைப்பும் தேவை.
மனோ மகன்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பம் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியானது. புதிய சிசிடிவி காட்சி மூலம், மனோவின் மகன்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளானது அம்பலம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.64 லட்சம் ரொக்கம் பறிமுதல். லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கூடாது என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.." தவெக சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..