தமிழ்நாடு

“தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்

தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்

 “தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்
அமைச்சர் பொன்முடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
தரமற்ற வகையில் பேசக்கூடாது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி, விழாப் பேருரையாற்றினார். அதனைத்தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் நிறைவில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி எம்.பி., “அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, அரசியலில் இருப்பவர்கள், அரசியல் இல்லாத ஆண்களோ பெண்களுக்கு எதிராகவும், எந்த சமூகத்திற்கு எதிராகவும், கன்னியமற்ற, தரமற்ற வகையில் பேசக்கூடாது. திமுக அந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள், ஆட்சியில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், வருங்காலத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சனம்

எப்போதும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் சேர மாட்டோம், பாஜக என்கின்ற அரசியல் கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கிறது. தமிழகத்திற்கு என்றும் விரோதமானது, எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று வீர வசனம் பேசிய அதிமுக, இன்று வேறு வழியில்லாமல் பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து இந்த கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பொதுவாக மாநில கட்சிகள் கூட்டணிக்கு தலைமை ஏற்கும்போது மாநிலக் கட்சியின் தலைவர் தான் அறிவிப்பது தான் வழக்கம். ஆனால், துரதிஷ்டவசமாக அதிமுக பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமியை ஓரமாக உட்கார வைத்து விட்டு, அமித்ஷாவே மொத்த கூட்டணி teams & Conditions எல்லாம் சொல்கிறார்.

அதில் தெளிவாக பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்கிறார். ஆட்சிக்கு வந்தால் தானே கூட்டணி ஆட்சி அமைக்க முடியும், நிச்சயமாக திமுக தலைமையிலான ஆட்சி தான் மீண்டும் 2வது முறையாக அமைக்கும். பாஜக எந்த மாநிலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த கட்சியை வேரோடும், வேர் மண்ணோடும் அழித்து விடுவார்கள்.அந்த இடத்திற்கு பாஜக வரும், இதற்கு பல்வேறு மாநிலங்களை எடுத்துக்காட்டாக தெரிவித்தார்.

கடைசி தேர்தலாக இருக்கலாம்

நீண்ட காலம் தமிழகத்தில் இருந்த கட்சி எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி, தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன். அது வருத்தத்திற்குரியது” என்றார்.