தமிழ்நாடு

மதுரை ஆதீனத்தை கொல்ல முயற்சியா?- கள்ளக்குறிச்சி காவல்துறை மறுப்பு

மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது

மதுரை ஆதீனத்தை கொல்ல முயற்சியா?- கள்ளக்குறிச்சி காவல்துறை மறுப்பு
விபத்தில் சிக்ககிய ஆதினம் சென்ற கார்
கொலை முயற்சி குற்றச்சாட்டு

கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்னைக்கு சென்றபோது, உளுந்தூர்பேட்டை-சேலம் சாலை ரவுண்டானா அருகே, ஆதினம் சென்ற காரும், மற்றொரு காரும் மோதிக்கொண்டன. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், தன்னைக் கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்துள்ளார். கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விளக்கம்

மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

முன்னதாக மதுரை ஆதினம் பேசிய தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.