நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு அவதூறு செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விஜய் ரசிகர்களின் விமர்சனப் பின்னணி
கரூர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி செந்தில் குமார், "சம்பவம் நடந்தவுடன் தொண்டர்களையும் ரசிகர்களையும் கைவிட்டுவிட்டுச் சென்ற விஜய்யையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் நீதிமன்றம் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நீதிபதி செந்தில்குமாரின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு, அவருக்கு எதிராகப் பல்வேறு அவதூறு கருத்துகளைச் சமூக ஊடகங்களில் விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாகக் கூறப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் மனு
இந்தச் சூழலில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள விடியோக்களை நீக்கக்கோரியும் தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், ஜாய் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாகத் தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
நீதிபதி செந்தில் குமாரின் கருத்து
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போதுதான் நீதிபதி செந்தில்குமார், சமூக ஊடகங்களில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளைக் குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.
விஜய் ரசிகர்களின் விமர்சனப் பின்னணி
கரூர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி செந்தில் குமார், "சம்பவம் நடந்தவுடன் தொண்டர்களையும் ரசிகர்களையும் கைவிட்டுவிட்டுச் சென்ற விஜய்யையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் நீதிமன்றம் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நீதிபதி செந்தில்குமாரின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு, அவருக்கு எதிராகப் பல்வேறு அவதூறு கருத்துகளைச் சமூக ஊடகங்களில் விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வருவதாகக் கூறப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் மனு
இந்தச் சூழலில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள விடியோக்களை நீக்கக்கோரியும் தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில், ஜாய் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாகத் தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
நீதிபதி செந்தில் குமாரின் கருத்து
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மனுவுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போதுதான் நீதிபதி செந்தில்குமார், சமூக ஊடகங்களில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளைக் குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.