கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார். கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். கடத்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது மகளும், மருமகனும் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்துசுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று தனது மனைவியை பார்ப்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வந்தார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங் (72) உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை காண மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையம் இன்று வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பாதுகாப்பு படை உயரதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் மருத்துவமனைக்கு சென்ற மத்திய அமைச்சர் அவர் தனது மனைவியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சரின் மனைவி சாவித்திரி சிங் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரோடு மத்திய அமைச்சரின் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக உடன் இருந்து கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக மத்திய அமைச்சர் கோயம்புத்தூர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வந்த அவர் தனது மனைவியை மருத்துவமனையில் பார்த்துக் விட்டு மாலை 6:15 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்தற்காக மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு வந்த அவர் முதலில் ஆதி மூலஸ்தான முருகப்பெருமானையும் பின்னர் பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார். தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்தார் பின்னர் அங்கு இருந்து 6.45 மணி அளவில் கிளம்பினார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங் (72) உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை காண மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையம் இன்று வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பாதுகாப்பு படை உயரதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் மருத்துவமனைக்கு சென்ற மத்திய அமைச்சர் அவர் தனது மனைவியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சரின் மனைவி சாவித்திரி சிங் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரோடு மத்திய அமைச்சரின் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக உடன் இருந்து கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக மத்திய அமைச்சர் கோயம்புத்தூர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வந்த அவர் தனது மனைவியை மருத்துவமனையில் பார்த்துக் விட்டு மாலை 6:15 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்தற்காக மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு வந்த அவர் முதலில் ஆதி மூலஸ்தான முருகப்பெருமானையும் பின்னர் பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார். தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்தார் பின்னர் அங்கு இருந்து 6.45 மணி அளவில் கிளம்பினார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.