தமிழ்நாடு

மீனாட்சி அம்மனை வழிபட்ட அமித்ஷா – உற்சாகமாக வரவேற்ற மதுரை ஆதீனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவை மதுரை ஆதீனம் வரவேற்றார்.

மீனாட்சி அம்மனை வழிபட்ட அமித்ஷா – உற்சாகமாக வரவேற்ற மதுரை ஆதீனம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சால்வை அணிவித்து மதுரை ஆதீனம் உற்சாகமாக வரவேற்றார்

அமித்ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறக்கூடிய பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக மதுரைக்கு வருகை தந்தார். இந்நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து 11.45 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தடைந்தார்.

முன்னதாக கோவில் முன்பாக அமைந்திருந்த மதுரை ஆதினம் மடத்தில் நின்றுக்கொண்டிருந்து மதுரை ஆதினமான ஸ்ரீ ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பார்த்தவுடன் காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மதுரை ஆதீனம் காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் மதுரை ஆதினத்தின் மூலமாக வெளியாகும் தமிழாகரன் இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தையும் , மனு ஒன்றையும் மதுரை ஆதினம் வழங்கினார்.

மனு அளித்த ஆதீனம்

இதனை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துவிட்டு மீண்டும் கோவிலுக்கு புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதீனம், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மகிழ்ச்சி அளிக்கிறது . இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு முடிவு எட்ட வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவை உள்துறை அமைச்சரிடம் வழங்கினேன்”என தெரிவித்தார்.