'தமிழ்நாடு போராடும்', 'ஆளுநரை எதிர்த்து போராடுவோம்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "உங்களையே எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி, தி.மு.க. அரசின் செயல்பாடுகளைச் சாடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தி திணிப்பு மற்றும் கல்வி
"முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை" என்று தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல.
நீங்கள் இந்தி மொழியை எதிர்த்துப் போராடுகிறேன் என்றால், இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரஸோடு நீங்கள் போராட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி... ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாராபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராகப் போராடுங்கள்.
நீட் தேர்வு மற்றும் வள்ளுவர் விவகாரம்
நீட்டை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்சநீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும். நீட் எதிர்த்துப் போராடுவேன் கையெழுத்து விடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்
உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறை வணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?
சாதியக் கொடுமைகள்
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில், உங்கள் சொந்தத் தொகுதியிலேயே தூய்மை தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே, அதை எதிர்த்துப் போராடுங்கள்
வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக? நீங்களே போராடுங்கள். திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்துப் போராடுங்கள்.
பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துக் கண்டனம்
கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களைப் பலிவாங்கி... அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்துப் போராடுங்கள். இன்றும் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்... பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்துப் போராடுங்கள்.
மேலும், ஒரு வானூர்தி சாகசத்தில் கூடப் பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறையை எதிராகவும், ஒரு அரசியல் கட்சிக்குச் சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாகக் காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் போராடுங்கள்.
இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்" என்று அவர் கடுமையாக சாடினார்.
இந்தி திணிப்பு மற்றும் கல்வி
"முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை" என்று தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல.
நீங்கள் இந்தி மொழியை எதிர்த்துப் போராடுகிறேன் என்றால், இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரஸோடு நீங்கள் போராட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி... ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாராபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராகப் போராடுங்கள்.
நீட் தேர்வு மற்றும் வள்ளுவர் விவகாரம்
நீட்டை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்சநீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும். நீட் எதிர்த்துப் போராடுவேன் கையெழுத்து விடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்
உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறை வணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?
சாதியக் கொடுமைகள்
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில், உங்கள் சொந்தத் தொகுதியிலேயே தூய்மை தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே, அதை எதிர்த்துப் போராடுங்கள்
வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக? நீங்களே போராடுங்கள். திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்துப் போராடுங்கள்.
பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துக் கண்டனம்
கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களைப் பலிவாங்கி... அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்துப் போராடுங்கள். இன்றும் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்... பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்துப் போராடுங்கள்.
மேலும், ஒரு வானூர்தி சாகசத்தில் கூடப் பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறையை எதிராகவும், ஒரு அரசியல் கட்சிக்குச் சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாகக் காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் போராடுங்கள்.
இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்" என்று அவர் கடுமையாக சாடினார்.