காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத மெத்தன போக்கில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கட்டப்படும் புதிய கட்டிடம் உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மற்றும் சோமசுந்தரம் தலைமையில், உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
அமித்ஷா yes சொன்னார்
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகைச் செல்வன், “உத்திரமேரூரில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்னும் ஏழு மாதத்தில் ஸ்டாலின் வீட்டிற்கு போக இருக்கிறார். ஏழு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு போக உள்ளார்.
பா.ம.க -அதிமுக கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, அவர் பாணியிலேயே சொல்லி விடுவோம். “போக..போகத்தெரியும்..” என பாட்டு பாடி பதில் அளித்தார். அமித்ஷாவிடம் கூட்டணி ஆட்சியில் பங்கு என்று கேட்டால் ‘எஸ்’ என்று கூறினார். எங்கள் பொதுச்செயலாளர் அதற்கு நோ என்று சொல்லிவிட்டார்.
அதிமுக கூட்டணியில் விசிக
ஏற்கனவே திருமாவளவனின் விசிக அதிமுக கூட்டணியில் இருந்தது தான். பா.ம.கவும் அதிமுக கூட்டணியில் இருந்தது தான். காங்கிரஸ் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது.கூட்டணி என்பது பொது எதிரியை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்வார்கள்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் தான் இந்தியா முழுவதும் வாக்களிக்கிறார்கள். இன்று பாஜக மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிறது. தப்பி தவறி காங்கிரஸ் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் பாஜகவை ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்தமுறை திமுக வரக்கூடாது என்பதற்காக, அந்த வாய்ப்பு அதிமுகவிற்கு வழங்கப்படும்.
திருச்சி சிவாவின் பேச்சு கண்டிக்கத்தக்கத்து
காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது வன்மையான கண்டிக்கத்தக்கது. பெருந்தலைவர் காமராஜர் அப்பழுக்கற்ற மகத்தான தலைவர். பெருந்தலைவர் காமராஜரை தரைக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்தவர் கருணாநிதி, அவருடைய கட்சியும் மாடி வீட்டு ஏழை என கொச்சைப்படுத்தியது. அப்படிப்பட்ட திமுகவின் பழைய பழக்கம் அவர்களுடைய ரத்தத்தில் இருக்கிறது. அதன் ஒரு பகுதி தான் திருச்சி சிவாவின் கருத்து என தெரிவித்தார்.
அமித்ஷா yes சொன்னார்
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகைச் செல்வன், “உத்திரமேரூரில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்னும் ஏழு மாதத்தில் ஸ்டாலின் வீட்டிற்கு போக இருக்கிறார். ஏழு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு போக உள்ளார்.
பா.ம.க -அதிமுக கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, அவர் பாணியிலேயே சொல்லி விடுவோம். “போக..போகத்தெரியும்..” என பாட்டு பாடி பதில் அளித்தார். அமித்ஷாவிடம் கூட்டணி ஆட்சியில் பங்கு என்று கேட்டால் ‘எஸ்’ என்று கூறினார். எங்கள் பொதுச்செயலாளர் அதற்கு நோ என்று சொல்லிவிட்டார்.
அதிமுக கூட்டணியில் விசிக
ஏற்கனவே திருமாவளவனின் விசிக அதிமுக கூட்டணியில் இருந்தது தான். பா.ம.கவும் அதிமுக கூட்டணியில் இருந்தது தான். காங்கிரஸ் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது.கூட்டணி என்பது பொது எதிரியை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்வார்கள்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் தான் இந்தியா முழுவதும் வாக்களிக்கிறார்கள். இன்று பாஜக மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிறது. தப்பி தவறி காங்கிரஸ் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் பாஜகவை ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்தமுறை திமுக வரக்கூடாது என்பதற்காக, அந்த வாய்ப்பு அதிமுகவிற்கு வழங்கப்படும்.
திருச்சி சிவாவின் பேச்சு கண்டிக்கத்தக்கத்து
காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது வன்மையான கண்டிக்கத்தக்கது. பெருந்தலைவர் காமராஜர் அப்பழுக்கற்ற மகத்தான தலைவர். பெருந்தலைவர் காமராஜரை தரைக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்தவர் கருணாநிதி, அவருடைய கட்சியும் மாடி வீட்டு ஏழை என கொச்சைப்படுத்தியது. அப்படிப்பட்ட திமுகவின் பழைய பழக்கம் அவர்களுடைய ரத்தத்தில் இருக்கிறது. அதன் ஒரு பகுதி தான் திருச்சி சிவாவின் கருத்து என தெரிவித்தார்.