இந்தியா

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவு.. 3 நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிப்பு!

கேரளா மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாநிலத்தில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவு.. 3 நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிப்பு!
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவு.. 3 நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிப்பு!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கிய வி.எஸ். அச்சுதானந்தன் அவர்கள் காலமானதை தொடர்ந்து, மாநில அரசு அஞ்சலியுடன் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கத்தை அறிவித்துள்ளது. இந்தத் துக்க காலம் ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை அமலிலிருக்கும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 22 அன்று மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அரசு கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவைத் தொடர்ந்து, நாளை நடைபெறவிருந்த காலிகட் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் இந்த மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜூலை 22ஆம் தேதி, மாநிலத்திற்குள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்குப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களிலும் அரசு கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், இந்தக் காலத்தில் அரசு சார்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் அஞ்சலிக்குரிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசுப் பணியாளர் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாளை நடைபெறவிருந்த காலிகட் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்கள் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவைக் கருத்தில் கொண்டு ஜூலை 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். சமூக நீதி, ஊழலற்ற நிர்வாகம், எளிமையான வாழ்க்கைமுறை ஆகியவற்றுக்காக இவர் நிலைத்த அடையாளமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.