தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைத்துள்ள உத்தரவை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் தேவையில் 57% இறக்குமதி மூலமாகவே பெறப்பட்டு வருகிறது. நிலக்கடலை, கடுகு, தேங்காய், எள் ஆகிய முக்கிய பண்டைய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவுடன் இருந்த காலகட்டத்தில் இந்திய அரசு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு இறக்குமதி வரி இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவித்ததன் விளைவு, உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்ததால், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இருந்து வெளியேற்றப்பட்டதால், தற்பொழுது இந்தியா சமையல் எண்ணெய்க்கு வெளிநாடுகளையே சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மிகவும் தரமான சத்துக்கள் மிகுந்த உள்நாட்டு எண்ணெய் வித்துக்களை உண்டு வந்த மக்கள், தற்போது சத்துக்கள் இல்லாத, ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை சாப்பிட்டு பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்திய எண்ணெய் வித்துக்களில் அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது எனவும், அதனால் மாரடைப்பு வருகிறது என்கிற ஒரு அவதூறு பரப்பி இந்திய எண்ணெய் வித்துக்களை இந்திய மக்களையே புறக்கணிக்க வைத்துள்ளார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன எண்ணெய்களை மக்களை சாப்பிட வைத்ததால், இந்திய சமையல் எண்ணெய் சந்தை தற்போது வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் உள்ளது.
கொள்முதல் உத்தரவாதம் வழங்குக:
இந்தியா எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டுமானால், இந்தியாவில் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலையும், கொள்முதல் உத்தரவாதமும் வழங்க வேண்டும். அதோடு வெளிநாட்டு சமையல் எண்ணெய்கள் இறக்குமதி மீது இறக்குமதி வரி விதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மீது உச்சபட்ச வரி விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறது.
கடந்த 2022 டிசம்பரில் கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில் மாநாடும், அதன் பின்பு தமிழ்நாட்டில் 18 இடங்களில் தொடர் காத்திருப்பு போராட்டமும், தமிழ்நாட்டின் ஏழு இடங்களில் கோரிக்கை பேரணியும், டெல்லியில் ஆறு நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக நிலக்கடலை, தேங்காய், எள் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகிறோம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிவதா?
இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீது 20% வரி விதிக்கப்பட்டது. ஓரளவுக்கு தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்துக்களின் மீது விலை பெறுவதற்கு உதவி வருகிறது, ஆனால் தொடர்ச்சியாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொய் பரப்புரைகளை செய்து இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என தொடர்ச்சியாக எடுத்த முயற்சியின் விளைவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்து மத்திய அரசு தற்போது உயர்த்தப்பட்ட 27.5% வரியில் இருந்து 16.5% வரியை குறைத்துள்ளது.
இதனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் விலைகள் குறையும், அப்படி குறையும்போது உள்நாட்டு சமையல் எண்ணெய்களின் விலையையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், அவ்வாறு கட்டாயத்தின் பெயரில் விவசாயிகள் கடுமையாக நஷ்டம் அடைவதால் மீண்டும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலிருந்து விவசாயிகள் வெளியேறுவதற்கு இந்த வரி குறைப்பு உதவுமே தவிர, எந்த விதத்திலும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முன்னேற்றத்தை கொடுக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு ஒருபுறம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு திட்டம் வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. மறுபுறம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியை ஊக்குவித்து வருகிறது. இந்த இரட்டை நிலைப்பாட்டை தவிர்த்து இந்தியாவில் எண்ணெய் வித்துக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியும், தற்போது மத்திய அரசு வெளிநாட்டு சமையல் எண்ணெய் வகைகளுக்கு குறைத்து இருக்கக்கூடிய 11% வரியை மீண்டும் விதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்”என வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் தேவையில் 57% இறக்குமதி மூலமாகவே பெறப்பட்டு வருகிறது. நிலக்கடலை, கடுகு, தேங்காய், எள் ஆகிய முக்கிய பண்டைய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவுடன் இருந்த காலகட்டத்தில் இந்திய அரசு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு இறக்குமதி வரி இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவித்ததன் விளைவு, உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்ததால், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இருந்து வெளியேற்றப்பட்டதால், தற்பொழுது இந்தியா சமையல் எண்ணெய்க்கு வெளிநாடுகளையே சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மிகவும் தரமான சத்துக்கள் மிகுந்த உள்நாட்டு எண்ணெய் வித்துக்களை உண்டு வந்த மக்கள், தற்போது சத்துக்கள் இல்லாத, ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை சாப்பிட்டு பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்திய எண்ணெய் வித்துக்களில் அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது எனவும், அதனால் மாரடைப்பு வருகிறது என்கிற ஒரு அவதூறு பரப்பி இந்திய எண்ணெய் வித்துக்களை இந்திய மக்களையே புறக்கணிக்க வைத்துள்ளார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன எண்ணெய்களை மக்களை சாப்பிட வைத்ததால், இந்திய சமையல் எண்ணெய் சந்தை தற்போது வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் உள்ளது.
கொள்முதல் உத்தரவாதம் வழங்குக:
இந்தியா எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டுமானால், இந்தியாவில் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலையும், கொள்முதல் உத்தரவாதமும் வழங்க வேண்டும். அதோடு வெளிநாட்டு சமையல் எண்ணெய்கள் இறக்குமதி மீது இறக்குமதி வரி விதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மீது உச்சபட்ச வரி விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறது.
கடந்த 2022 டிசம்பரில் கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில் மாநாடும், அதன் பின்பு தமிழ்நாட்டில் 18 இடங்களில் தொடர் காத்திருப்பு போராட்டமும், தமிழ்நாட்டின் ஏழு இடங்களில் கோரிக்கை பேரணியும், டெல்லியில் ஆறு நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக நிலக்கடலை, தேங்காய், எள் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகிறோம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிவதா?
இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீது 20% வரி விதிக்கப்பட்டது. ஓரளவுக்கு தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்துக்களின் மீது விலை பெறுவதற்கு உதவி வருகிறது, ஆனால் தொடர்ச்சியாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொய் பரப்புரைகளை செய்து இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என தொடர்ச்சியாக எடுத்த முயற்சியின் விளைவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிபணிந்து மத்திய அரசு தற்போது உயர்த்தப்பட்ட 27.5% வரியில் இருந்து 16.5% வரியை குறைத்துள்ளது.
இதனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் விலைகள் குறையும், அப்படி குறையும்போது உள்நாட்டு சமையல் எண்ணெய்களின் விலையையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், அவ்வாறு கட்டாயத்தின் பெயரில் விவசாயிகள் கடுமையாக நஷ்டம் அடைவதால் மீண்டும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலிருந்து விவசாயிகள் வெளியேறுவதற்கு இந்த வரி குறைப்பு உதவுமே தவிர, எந்த விதத்திலும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முன்னேற்றத்தை கொடுக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு ஒருபுறம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு திட்டம் வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. மறுபுறம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியை ஊக்குவித்து வருகிறது. இந்த இரட்டை நிலைப்பாட்டை தவிர்த்து இந்தியாவில் எண்ணெய் வித்துக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியும், தற்போது மத்திய அரசு வெளிநாட்டு சமையல் எண்ணெய் வகைகளுக்கு குறைத்து இருக்கக்கூடிய 11% வரியை மீண்டும் விதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்”என வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.