இந்தியா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866-லிருந்து 5,364-ஆக உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 498 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் தற்போதைய கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 4,866-லிருந்து 5,364-ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது 5,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். மீதமுள்ளோர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் கணிசமாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில், கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்கள் பூரண பாதுகாப்பில் இருப்பதாக எண்ணி கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும், பல்வேறு பகுதிகளில் மக்கள் முகக்கவசம் பயன்படுத்தாமல் இருப்பதால்தான் மீண்டும் தொற்று அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளி, முகக்கவசம், சோதனைகள் மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதே நிபுணர்களின் ஆலோசனை வழங்கிவருகின்றனர்.