குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தைத் தொடா்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் உள்பட பல்வேறு துறையினர் விரைந்து வந்து விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சில மணி நேரங்களில் அகமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. விமான விபத்து நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் நேற்று (ஜூன்.12) ஆய்வு செய்தனர்.
விபத்தில் 2 விமானி உட்பட 241 பேர் உயிரிழந்ததாகவும், பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் 7 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன்.13) காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் ராம் மோகன் நாயுடு, பூபேந்திர படேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விமானம் எவ்வாறு மோதியது என்பது தொடர்பாக ராம் மோகன் நாயுடு, பிரதமருக்கு விளக்கம் அளித்தார். மேலும், விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணி விஸ்வாஸ் குமாரையும், மருத்துவர் விடுதியில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் மருத்துவமனையில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.
இந்த விமான விபத்தைத் தொடா்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் உள்பட பல்வேறு துறையினர் விரைந்து வந்து விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சில மணி நேரங்களில் அகமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. விமான விபத்து நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் நேற்று (ஜூன்.12) ஆய்வு செய்தனர்.
விபத்தில் 2 விமானி உட்பட 241 பேர் உயிரிழந்ததாகவும், பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்லூரி விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் 7 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன்.13) காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் ராம் மோகன் நாயுடு, பூபேந்திர படேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விமானம் எவ்வாறு மோதியது என்பது தொடர்பாக ராம் மோகன் நாயுடு, பிரதமருக்கு விளக்கம் அளித்தார். மேலும், விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணி விஸ்வாஸ் குமாரையும், மருத்துவர் விடுதியில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் மருத்துவமனையில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.