தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ - TAMCO) சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தனிநபர் கடன் திட்டத்தின் வாயிலாக ரூ.30 லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது.
சுயமாக தொழில், வியாபாரம் மேற்கொள்ள விரும்புவோர், கறவை மாடுகள் வாங்கி விவசாயத் தொழிலில் ஈடுபடுவோர் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். டாம்கோ தனிநபர் கடன் திட்டம் குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு-
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் & தகுதிகள்:
--> கடன் தொகை: இத்திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு அதிகபட்சமாக ₹30,00,000 (முப்பது லட்சம் ரூபாய்) வரை கடன் வழங்கப்படும்.
--> பயனாளிகள்: சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின்கள்)
--> வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
--> ஒரு குடும்பத்திற்கு ஒரு கடன்: ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இக்கடன் வழங்கப்படும். ஏற்கெனவே உங்களது குடும்பத்தில் ஏவரேனும் இக்கடன் திட்டத்தின் வாயிலாக பயன் அடைந்திருப்பின் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட ஆவணங்களின் நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்
1. சிறுபான்மையினர் மதச் சான்றிதழ் (திறமையான அதிகாரியால் வழங்கப்பட்டது).
2. வருமானச் சான்றிதழ்.
3. சாதி சான்றிதழ்.
4. குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) அல்லது இருப்பிட சான்றிதழ் (முகவரிச் சான்றுக்கு).
5. ஆதார் அட்டை
6. திட்ட அறிக்கை (தொழில்/நிறுவன தொடர்பான கடன்களுக்கு).
7. வங்கியால் கோரப்படும் பிற ஆவணங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் கிடைக்கும்.
1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்.
2. மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
3. மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி,
கடன் வகைகள் (இரண்டு பிரிவுகள்): டாம்கோ தனிநபர் கடன் திட்டமானது இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
திட்டம் - 1:
--> ஆண்டு வருமான வரம்பு: ஆண்டு வருமானம் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ₹3,00,000 (மூன்று லட்சம் ரூபாய்) க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
--> அதிகபட்ச கடன் தொகை: ரூ. 20 லட்சம்
--> வட்டி விகிதம் (ஆண்கள்): ஆண்டுக்கு 6%.
--> வட்டி விகிதம் (பெண்கள்): ஆண்டுக்கு 6%.
--> திருப்பி செலுத்தும் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகள்
திட்டம் - 2:
--> ஆண்டு வருமான வரம்பு: திட்டம் 1-ன் கீழ் நன்மை பெற முடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ₹8,00,000 (எட்டு லட்சம் ரூபாய்) வரை உள்ளவர்களுக்கானது.
--> அதிகபட்ச கடன் தொகை: ₹30,00,000 (முப்பது லட்சம் ரூபாய்) வரை.
--> வட்டி விகிதம் (ஆண்கள்): ஆண்டுக்கு 8%.
--> வட்டி விகிதம் (பெண்கள்): ஆண்டுக்கு 6%.
--> திருப்பி செலுத்தும் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகள்
டாம்கோவின் இந்த கடன் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு கணிசமான நிதி உதவியை வழங்கி, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என கருதப்படுகிறது.
சுயமாக தொழில், வியாபாரம் மேற்கொள்ள விரும்புவோர், கறவை மாடுகள் வாங்கி விவசாயத் தொழிலில் ஈடுபடுவோர் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். டாம்கோ தனிநபர் கடன் திட்டம் குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு-
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் & தகுதிகள்:
--> கடன் தொகை: இத்திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு அதிகபட்சமாக ₹30,00,000 (முப்பது லட்சம் ரூபாய்) வரை கடன் வழங்கப்படும்.
--> பயனாளிகள்: சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின்கள்)
--> வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
--> ஒரு குடும்பத்திற்கு ஒரு கடன்: ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இக்கடன் வழங்கப்படும். ஏற்கெனவே உங்களது குடும்பத்தில் ஏவரேனும் இக்கடன் திட்டத்தின் வாயிலாக பயன் அடைந்திருப்பின் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட ஆவணங்களின் நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும்
1. சிறுபான்மையினர் மதச் சான்றிதழ் (திறமையான அதிகாரியால் வழங்கப்பட்டது).
2. வருமானச் சான்றிதழ்.
3. சாதி சான்றிதழ்.
4. குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) அல்லது இருப்பிட சான்றிதழ் (முகவரிச் சான்றுக்கு).
5. ஆதார் அட்டை
6. திட்ட அறிக்கை (தொழில்/நிறுவன தொடர்பான கடன்களுக்கு).
7. வங்கியால் கோரப்படும் பிற ஆவணங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் கிடைக்கும்.
1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்.
2. மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
3. மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி,
கடன் வகைகள் (இரண்டு பிரிவுகள்): டாம்கோ தனிநபர் கடன் திட்டமானது இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
திட்டம் - 1:
--> ஆண்டு வருமான வரம்பு: ஆண்டு வருமானம் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ₹3,00,000 (மூன்று லட்சம் ரூபாய்) க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
--> அதிகபட்ச கடன் தொகை: ரூ. 20 லட்சம்
--> வட்டி விகிதம் (ஆண்கள்): ஆண்டுக்கு 6%.
--> வட்டி விகிதம் (பெண்கள்): ஆண்டுக்கு 6%.
--> திருப்பி செலுத்தும் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகள்
திட்டம் - 2:
--> ஆண்டு வருமான வரம்பு: திட்டம் 1-ன் கீழ் நன்மை பெற முடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ₹8,00,000 (எட்டு லட்சம் ரூபாய்) வரை உள்ளவர்களுக்கானது.
--> அதிகபட்ச கடன் தொகை: ₹30,00,000 (முப்பது லட்சம் ரூபாய்) வரை.
--> வட்டி விகிதம் (ஆண்கள்): ஆண்டுக்கு 8%.
--> வட்டி விகிதம் (பெண்கள்): ஆண்டுக்கு 6%.
--> திருப்பி செலுத்தும் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகள்
டாம்கோவின் இந்த கடன் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு கணிசமான நிதி உதவியை வழங்கி, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என கருதப்படுகிறது.