நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. ‘நான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர், ‘சலீம்’, பிச்சைக்காரன், ‘திமிரு பிடிச்சவன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை அவர் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், அவரது நடிப்பில் ‘மார்கன்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லியோ ஜான் பால் இயக்கிய இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
முன்னதாக அவர் 'மார்கன்' பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ‘பிச்சைக்காரன் 3’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர் , “ ‘பிச்சைக்காரன் 3’ கதையை இப்போது கூட என்னால் சொல்ல முடியும்.
இது முதல் பாகம் மற்றும் 2 ஆம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பிச்சைக்காரன் 3’ வெளியாகும்” என்று அவர் கூறினார்.
“பிச்சைக்காரன் 3” படத்தின் அப்டேட் கிடைத்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடித்திருந்தார். இந்த படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் னால வரவேற்பை பெற்றது.
மேலும், ‘பிச்சைக்காரன் 3’ படத்தையும் விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடிக்க உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அவரது நடிப்பில் ‘மார்கன்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லியோ ஜான் பால் இயக்கிய இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
முன்னதாக அவர் 'மார்கன்' பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ‘பிச்சைக்காரன் 3’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர் , “ ‘பிச்சைக்காரன் 3’ கதையை இப்போது கூட என்னால் சொல்ல முடியும்.
இது முதல் பாகம் மற்றும் 2 ஆம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பிச்சைக்காரன் 3’ வெளியாகும்” என்று அவர் கூறினார்.
“பிச்சைக்காரன் 3” படத்தின் அப்டேட் கிடைத்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடித்திருந்தார். இந்த படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் னால வரவேற்பை பெற்றது.
மேலும், ‘பிச்சைக்காரன் 3’ படத்தையும் விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடிக்க உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.