Breaking news

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று நேரில் அசோக் குமார் ஆஜர் ஆகியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அவரது சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்ட போது, தலைமறைவாகிய அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகியுள்ளார்.