K U M U D A M   N E W S

SC

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: மசோதா நிறைவேற்றப்படாததால் பெரும் பரபரப்பு!

புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

'Saven Thursday Harendra': தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் எழுத்துப் பிழை.. சமூக வலைதளங்களில் கேலி!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் அதிகப்படியான எழுத்துப் பிழைகள் இருந்ததால் அது சமூக ஊடகங்களில் கேலிப்பொருளாகி வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு தூய்மை மிஷன்: யோகி பாபு விழிப்புணர்வு வீடியோ வெளியீடு - ₹25,000 பரிசுடன் ரீல்ஸ் போட்டி அறிவிப்பு!

தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர், ஹரியானாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாலை அதிர்வால் மக்கள் பீதி!

மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

விஜயதசமி அன்று அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை: விரைந்து செயல்பட உத்தரவு!

விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.

குரூப் 2 தேர்வு - 5.53 லட்சம் பேர் எழுத அனுமதி | Group Exam | TNGovt | TNPSC | Student | KumudamNews

குரூப் 2 தேர்வு - 5.53 லட்சம் பேர் எழுத அனுமதி | Group Exam | TNGovt | TNPSC | Student | KumudamNews

குரூப் 2 தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர் - TNPSC முக்கிய அறிவுறுத்தல்!

செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!

கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.