K U M U D A M   N E W S

ரூ.100 கோடி நில அபகரிப்பு..தலைமறைவான எம்ஆர் விஜயபாஸ்கர்..சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ்

100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Rajini Salary: “ரஜினி வேணும்ன்னா கேக்குற சம்பளம் கொடுங்க..” கட் & ரைட்டா பேசின கமல்..!!

ரஜினி தான் நடிக்க வேண்டும் என்றால் அவர் கேட்கின்ற சம்பளத்தை கொடுத்து தான் ஆக வேண்டும் என கமல்ஹாசன் அதிரடியாக கூறியுள்ளார்.

Rajinikanth : “கல்கி வேற லெவல்... பார்ட் 2க்கு வெயிட்டிங்” ரஜினி மெர்சல்... நாக் அஸ்வின் Speechless!

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

டி 20 உலகக் கோப்பை பைனல்... சாம்பியன் கனவில் இந்தியா – தென்னாப்பிரிக்கா... கோப்பை யாருக்கு?

பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங்கில் இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மழையால் ஆட்டம் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Kalki Box Office: ஒரே நாளில் வசூலில் தடுமாறிய கல்கி 2898 AD... பிரபாஸ் & கோ அப்செட்!

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளில் 191 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு மோசடிகள்.. லோக்சபாவை முடக்கிய இந்தியா கூட்டணி எம்பிக்கள்.. ராகுல் மைக் துண்டிப்பு

டெல்லி: லோக்சபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் ஜூலை 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். லோக்சபாவில் நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கல்வி விருது விழா.. அன்பு தம்பி தளபதி விஜய்.. முதல் ஆளாய் வாழ்த்து சொன்ன சீமான்

ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் தம்பி விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜய்.

7 நாட்களுக்கு மழை இருக்கு.. ரெயின் கோட் இல்லாம வெளியே போகாதீங்க.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.