மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Anbumani Ramadoss Condemns Mohan G Arrest : திரைப்பட இயக்குனர் மோகனை செய்யாத குற்றத்திற்காக கைது செய்வதா? உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sri Lanka New Prime Minister Harini Amarasuriya : இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக நியமித்தார்.
Tiruppur Protest : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவில்பாளையத்தில் கோயில் நிலத்தை ஏலம் விடுவதாக அறநிலையத்துறை அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
AIADMK Women Wing Protest Against DMK : திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் முழக்கமிட்டனர்.
Anbumani Ramadoss : மத்திய, மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. தமிழக அரசு பள்ளிகளில் தொழில்பயிற்றுநர்களை உடனே நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Jayakumar About Udhayanidhi Stalin : உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வருவதன் வெளிப்பாடாக தான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Water Canel Issue in Ramanathapuram : ராமநாதபுரத்தில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார இளைஞர்கள் தாமாக முன் வந்து அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
NIA Raids in Chennai : பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் NIA சோதனை நடத்தியது. இந்நிலையில் சென்னை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ் மற்றும் சையது அலி ஆகியோர் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது