இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.