K U M U D A M   N E W S

மின் கட்டண உயர்வு: தேர்தல் வெற்றிக்கு திமுகவின் பரிசு.. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சாடல்!

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''

மின்கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?.. அடுக்கடுக்கான காரணங்களை பட்டியலிட்டு மின்வாரியம் விளக்கம்!

'தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது' என்று மின்வாரியம் கூறியுள்ளது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. ஒன்று திரண்ட தமிழகம்.. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. அதிமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?.. மின்வாரியம் விளக்கம்!

''குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலம் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்படும் வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்''

மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டிஎம்சி நீர்... கர்நாடக அரசு இன்று காவிரியில் தண்ணீர் திறக்குமா..?

ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி கர்நாடக அரசு இன்று முதல் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு கவுரவம்... அரசு பள்ளிகள் புறக்கணிப்பு... - ஆசிரியர்கள் வேதனை

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சட்டென மாறிய வானிலை.. தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டும் மழை... சென்னையில் வெப்பம் தணிந்தது!

சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், ஆவடி பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

'2026 டார்கெட்'.. 'இளைஞர்கள் பலம்'.. எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. நிர்வாகிகளிடம் பேசியது என்ன?

''கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளியுங்கள்''