K U M U D A M   N E W S

"சிங்கம்" பட வில்லனாக வலம் வந்து தொழிலதிபர்களை மிரட்டியவர்... யார் இந்த சீசிங் ராஜா?

Rowdy Seizing Raja : தமிழகம், ஆந்திரா என இரண்டு மாநில காவல்துறையால் தேடப்பட்டவர் தான் ரவுடி சீசிங் ராஜா. யார் இவர்? ஏன் சீசிங் ராஜா என அழைக்கப்படுகிறார்? என்பது குறித்து பார்க்கலாம்.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024

கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா, பசுமைவெளி!

சென்னை கிண்டியில் ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பசுமைவெளி உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

செப்.27-ல் பிரதமருடன் முதலமைச்சர் சந்திப்பு

சமக்ரா சிக்ஷா நிதி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 27ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை ஆய்வு மையம் சொன்ன புதிய தகவல்!

இன்று ( செப். 22) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Seeman : ‘நந்தன் என்னை வெகுவாக பாதித்த திரைப்படம்’.. உருகிய சீமான்!

Seeman Praised Nandhan Movie : ''கலையைப் போற்றுவதும், கலைஞர்களைக் கொண்டாடுவதும் சமூகத்தின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, சமத்துவத்தைப் போதிக்கும் ‘நந்தன்’ எனும் உன்னதப்படைப்பைக் கண்டுகளிப்போம்! நற்கருத்துகளை விதைக்கும் மக்களுக்கான கலைஞர்களைக் கொண்டாடுவோம்’’ என்று சீமான் கூறியுள்ளார்.

'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!

''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024

TVK Vijay: தவெக மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்... பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த புது அப்டேட்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் கொடுத்துள்ள புது அப்டேட், தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Madurai : பவுடர் பால் குடித்த குழந்தை உயிரிழப்பு - மதுரையில் நேர்ந்த சோகம்

Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... சென்னையில் எப்படி?

Heavy Rain in Tamil Nadu : 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 21-09-2024

இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பை இங்கே காணலாம்.

குளுகுளு ஊட்டியாக மாறிய சென்னை.. கொட்டித் தீர்க்கும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!

கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.

தமிழ்நாட்டில் அனல் பறக்கப்போகுதாம்... வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் மக்களே!

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குண்டர் சட்டம்... தேவையான சட்டத் திருத்தம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுத்தல்!

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

'அரசியலில் முதல் படி.. எதிரிகள் தவிடுபொடி'.. சமூகவலைத்தளத்தில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

தவெக மாநாட்டு தேதியை விஜய் அறிவித்த அடுத்த நொடி முதல் எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தவெக மாநாடு குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு... தமிழக அரசுக்கு கறாராக உத்தரவிட்ட நீதிமன்றம்

Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... தமிழக அரசின் திடீர் உத்தரவு.. கொந்தளிக்கும் மக்கள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது