K U M U D A M   N E W S

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஜினி-கமல் இதனால் தான் உயரத்தில் இருக்கிறார்கள்.. உண்மையை உடைத்த சுந்தர்.சி

ரஜினி, கமல் இருவரும் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

Headlines Now | 6 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

Headlines Now | 6 AM Headline | 17 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

அதிகரிக்கும் வங்கி மோசடி... 2 ஆண்டுகளில் 40 வழக்குகள்.. காவல்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

2 ஆண்டுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக 40 வழக்குகளில் 205 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை ஆதினம்

வன்முறை, சண்டை காட்சிகள் குறித்து வரும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா.. ஆண்கள் மட்டும் செலுத்தும் நேர்த்திகடன்

மூன்று நாட்கள் செல்லியாண்டி அம்மன் கோயிலில் தங்கி விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மட்டுமே 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

குட்கா முறைகேடு வழக்கு.. சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் பென்-ரைவ் மூலம் வழங்கிய கூடுதல் குற்றபத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்க வேண்டும் என சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம்.. சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை!

சவுக்கு சங்கர் வீட்டில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தடயங்களை சேகரித்தனர்.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.