K U M U D A M   N E W S

mi

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி...நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சின்போது, ''நாடு முழுவதும் உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலத்தை சேர்ந்தவர்களே வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பதவியில் இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

மாநில கல்விக் கொள்கை ..முதல்வரிடம் அறிக்கை சமர்பித்த குழு.. என்னென்ன சிறப்பம்சம்

மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி ரயில் புக்கிங்.. 2 நிமிஷம்தான் உடனே வெயிட்டிங் லிஸ்ட்.. ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு எப்போ?

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. சிறப்பு ரயில்கள் இயக்கினால் மட்டுமே தென் மாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

அட! சென்னையிலும் மழை கொட்டப் போகுதா... குடையை எடுத்து ரெடியா இருங்க மக்களே!

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

'அம்மாவின் பெயரில் மரம் நடுங்கள்'.... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

''தேர்தலுக்கு பிறகு மீண்டும் 'மன் கி பாத்' வாயிலாக பேசுவேன் என கடந்த பிப்ரவரி மாதம் கூறி இருந்தேன். அதன்படி இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன்''

தமிழ்நாட்டின் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை... என்ன காரணம்?... பரபரப்பு தகவல்!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

டி20 உலகக்கோப்பை சாம்பியன்... இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து... வீரர்களிடம் போனில் பேசிய பிரதமர் மோடி!

''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''

'கிக்’குக்காக கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்... அமைச்சர் துரைமுருகன் பேச்சு... வானதி சீனிவாசன் கண்டனம்!

சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சர்களே மதுப்பழக்கத்தை ஆதரித்து பேசும் சூழல் நிலவுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை.. ரூ.10 லட்சம் அபராதம்.. முதல்வர் ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.