Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024
Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024
Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024
பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ’’பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி அல்ல; அவர்கள் (பாகிஸ்தான்) முதலில் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 19) இரவுக்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா தேர்தல் நடந்தது. அப்போது ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். அப்போது அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.