K U M U D A M   N E W S

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது 

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் ஓய்வு?.. வைரலான பதிவால் பரபரப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்.. 48 மணி நேரத்தில் 61 பேர் உயிரிழப்பு!

போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சிலை செய்ய முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் முடிந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பண்ருட்டி அருகே  விநாயகர் சிலை செய்வதற்காக களிமண் எடுக்க  சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

634 நாட்களுக்குப் பிறகு களத்தில் ‘ஸ்டார்’ பிளேயர் - வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

GOAT: “ப்ரோமோஷனுக்கு மட்டும் தல” கோட் தயாரிப்பாளரை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்... இதுதான் பஞ்சாயத்தா?

விஜய் நடித்துள்ள கோட் படத்தில் அஜித்தின் ரெஃபரன்ஸ் இருந்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால், தற்போது கோட் தயாரிப்பு நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் கடுமையாக வசைபாடி வருவது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

மகா விஷ்ணு மீது குவியும் புகார்கள்...

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

GOAT-ல் விஜயகாந்த்.. நன்றி கடனா அல்லது வாக்கு வங்கியா..? விஜய் போடும் கணக்கு என்ன?

தி கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் நடிக்க வைத்தது நன்றி கடனுக்காகவா அல்லது தேர்தல் வாக்குக்காகவா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

சென்னையில் இறங்கிய 16,500 போலீசார் - தீவிர பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை முழுவதும் 16, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.