மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 24-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 24-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 24-10-2024 | Mavatta Seithigal
பேச்சுவார்த்தையை மட்டுமே எப்போதும் ஆதரிக்க வேண்டும் - போரை அல்ல. சர்வதேச பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் தேவை எனவும் பிரதமர் மோடி கருத்து.
பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு இந்தியா-சீனா இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன அதிபர் ஜி-ஜின் பிங் சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. தொடர்ந்து நிகழும் கைது சம்பவத்தால் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சி
கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு - நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, ஒரத்தநாடு வீடு, கோடம்பாக்கம் தனியார் கட்டுமான நிறுவனம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.