மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு போலீசார், பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.