K U M U D A M   N E W S

’மெய்யழகன்’ காட்சிகள் நீக்கம்..ஏன் தெரியுமா?

’மெய்யழகன்’ படத்தில் இருந்து 18 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாகவும் அதற்கு விளக்கமளித்தும் இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#BREAKING : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 50% நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - அண்ணாமலை

BREAKING | அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்

தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்

சித்தராமையா மீது வழக்குப்பதிவு.. அமலாக்கத்துறை வைத்த செக்

மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

மூடா முறைகேடு... சித்தராமையாவுக்கு எதிராக ED வழக்கு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 250 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

தொடரும் விவாகரத்து சர்ச்சை: “பேச்சுவார்த்தைக்கு தயார்..” ஆர்த்தியின் பதிலடி

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.

Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ட்ரெய்லர் பராக்... தலைவர் குறி வச்ச மாதிரி... இரை விழுமா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழை.. அவதிக்குள்ளான மக்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் மூழ்கியதால் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அக்.4-ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் அக்டோபர் 4-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.