K U M U D A M   N E W S

ஒட்டு போட்டவர்களுக்கு போட்டு அனுப்புறாங்க.. மார்கெட்டிங் தான் நடக்குது - தமிழிசை தாக்கு

திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

டீ குடிப்பதால் எதுவும் மாறாது.. சரளமாக பொய் சொல்கிறார்கள்.. சசிகலா தாக்கு

தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு தங்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாலேயோ எதுவும் மாற போறதில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

களத்தில் முதலமைச்சர்.. சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

ஆறாக மாறிய சென்னையின் முக்கிய சாலை.. குளித்து மகிழும் சிறுவர்கள்

கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் ஜீவா ரயில் நிலையம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர். 

என்ன பெரிய வேளச்சேரி பிரிட்ஜ்.. தண்டையார்பேட்டை பிரிட்ஜ் கேள்விப்பட்டு இருக்கீங்களா.?

வேளச்சேரி பாலத்தைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தின் இருபுறங்களிலும் ஆட்டோ, கார், வேன், மினி பேருந்து என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ் கூட போடவில்லை.. மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து.. ரசிகர்கள் சோகம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

12 மாவட்டங்களில் டேஞ்சர்..! - ருத்ரதாண்டவம் ஆடப்போகும் கனமழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.