K U M U D A M   N E W S
Advertisement

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TVK Flag Issue : தவெக கொடி பஞ்சாயத்து ஓவர்... க்ரீன் சிக்னல் கொடுத்த தேர்தல் ஆணையம்... விஜய் நிம்மதி!

TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

”ஒரே நாடு ஒரே தேர்தல் இதுக்காகத்தான்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு !

MK Stalin on One Nation One Election: மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு! தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

சீனாவில் அறிமுகமான Redmi Note 14 5G சீரிஸ்!

Redmi Note 14 5g Series Launch in China : சீன ஸ்மார்ட் போன் மற்றும் எலெக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனமான Xiaomi தற்போது தனது புதிய தயாரிப்பான Redmi Note 14 5G ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Redmi Note 14 5G சீரிஸில் Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 Pro+ ஆகிய இரண்டு மாடல்கள் அறிமாகியுள்ளன. இதனுடன் சேர்ந்து Redmi Buds 6 இயர்பட்களும் அறிமுகமாகியது.

முதலமைச்சரை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் காலில் விழுந்த செந்தில் பாலாஜி

இருள் நீங்கி சூரியனின் காலடியில்... தலைவரே.... முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி!

டெல்லியில் இருந்து திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கி தனது நன்றிகளைத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

வார விடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமின்: மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்

வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.