பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அபார சாதனைகளை படைத்துள்ளார்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக.
காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட பாஜக பலம் பொருந்திய கட்சியாக வர வாய்ப்புள்ளது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வேகமாக வெளியிடுமாறு காங்கிரஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்.
பாஜகவை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நின்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி.
அரியானா மாநிலத்தில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றவுள்ளனர்