K U M U D A M   N E W S

திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? - திருச்சியில் சரமாரி கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். அப்போது ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன எனச் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

திருச்சி மண் ஒரு திருப்புமுனையாக அமையும் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியிலிருந்து இன்று தொடங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தல், ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

விஜய் பிரச்சாரத்திற்கு அரசு முட்டுக்கட்டை போடுகிறது - நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை: 2022 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் தீர்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022-ல் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்க விஜய் நான் வரேன் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை முதல் பிரசாரம் தொடக்கம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (செப். 13) முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பிரசார இலட்சினையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளைப் பதவியேற்பு!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.

மயிலாப்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞர்கள் கைது!

மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!

பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.