K U M U D A M   N E W S
Advertisement

Court

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

செந்தில் பாலாஜி ஜாமின்: மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது - கே.பாலகிருஷ்ணன்

வழக்கை நடத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து ஒரு வருடம் ஒன்றரை வருடம் என சிறையில் அடைப்பது நீதிமன்றம் தண்டனை வழங்குவதற்கு முன்பே அரசாங்கம் தண்டனை அளிக்கும் விதமாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின்.... முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி... செந்தில் பாலாஜி!

நிபந்தனை ஜாமின் கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த புழல் சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்தார்.

செந்தில் பாலாஜி ஜாமின்: பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு... வானதி சீனிவாசன் தாக்கு!

செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி விடுதலையில் கடைசி நேரத்தில் எழுந்த புதிய சிக்கல்..

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புழல் சிறை முன் குவியும் திமுகவினர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி...

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு முன் குவிந்த திமுக தொண்டர்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை அல்லது நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக புழல் சிறை வாசலில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

“வசூல்ராஜா MBBS வேலையை மட்டும் இந்து சமய அறநிலையத்துறை செய்கிறது” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.