சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. மத்திய அரசு அதிரடி!
நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.