K U M U D A M   N E W S
Promotional Banner

தொடரும் அட்டூழியம் - மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை

பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர் செய்த அதிர்ச்சி செயல்... கைது செய்த போலீசார்

திருச்செந்தூர் அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியை தொடர்ந்து நாகையிலும்... தவெகவில் இணைந்த NTK கட்சியினர்

நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.

"யாரும் கிட்ட வராதீங்க.." - கையில் குழந்தையுடன் தந்தை செய்த காரியம்

மங்களூரு அருகே குடும்பத் தகராறு காரணமாக சந்தீப் என்பவர் குழந்தையுடன் பாலத்தின் மீது ஏறி நின்று கீழே குதிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈ.டி. ரெய்டால் பரபரப்பான சென்னை.. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரால் அதிரடி

தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தனியார் நிறுவனத்தில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி

தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.. அமமுக நிர்வாகிகளால் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்ற நிலையில், உடன் சென்ற நிர்வாகி படுகாயம் அடைந்தார்.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிரடி.. பல்வேறு பகுதிகளில் ரெய்டு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Jayakumar : ”கலைக்காக வாழ்ந்து, கலைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் டெல்லி கணேஷ்”

Jayakumar : ”கலைக்காக வாழ்ந்து, கலைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் டெல்லி கணேஷ்”

அன்று உதவிய டெல்லி கணேஷ்.. பழசை மறக்காத வெற்றிமாறன்.. நெஞ்சை கலங்கடிக்கும் கதை

அன்று உதவிய டெல்லி கணேஷ்.. பழசை மறக்காத வெற்றிமாறன்.. நெஞ்சை கலங்கடிக்கும் கதை

உதயநிதி வருகையின்போது போராட்டம் நடத்த முடிவு

ராமநாதபுரத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வருகையின்போது போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

ஏர்போர்டில் திமுக எம்.எல்.ஏ. வாக்குவாதம்.. ஆதரவாளரை அனுமதிக்காததால் ஆத்திரம்

நுழைவுச்சீட்டு இல்லாமல் வந்த தனது ஆதரவாளரை விமான நிலையத்திற்கு உள்ளே விடும்படி மத்திய பாதுகாப்பு படை அதிகாரியிடம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வினையான விளையாட்டு.. திருப்பத்தூரில் அரங்கேறிய சோகம்

குழந்தையை காரில் அமர்த்தி தந்தை விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நிலையில் கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா முத்து சிகிச்சை பலன்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

ஹெச்.ராஜா சொன்னது சரிதான்; தவறே இல்லை - கரு.நாகராஜன் கருத்து

பாஜக பொறுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா சொன்னது உண்மைதான்; அதில் தவறு ஏதும் கிடையாது என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

அமரன் பட சர்ச்சை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்

நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவையும் இன்று அதிகரித்து உள்ளதாக மத்திய  இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

60 ரூபாய் வழிப்பறி வழக்கு.. 27ஆண்டுகள் தலைமறைவு.. தட்டித்தூக்கிய போலீஸ்

60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுக நிர்வாகி செல்போன் மூலம் ஆபாச படம்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திமுக நிர்வாகியின் சிம்கார்டை பயன்படுத்தி, பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமரன் படத்துக்கு வந்த திடீர் சிக்கல் - திரையரங்குகளுக்கு போலீஸார் பாதுகாப்பு

அமரன் படத்தை திரையிட இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு.

பிரபல நடிகை கைது - ஆடிப்போன திரையுலகம்

சென்னை ராயப்பேட்டை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சுந்தரி சீரியல் நடிகையை போலீசார் கைது செய்தனர்.

"நான் எந்நாளும் மந்திரி தான்.." குட்டி ஸ்டோரி சொல்லி கலாய்த்த தமிழிசை சௌந்தரராஜன்

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இன்றைக்கும் நான் ஆளுநர்தான்... மக்களின் அன்பை ஆண்டு கொண்டிருக்கிறேன்.. தமிழிசை சௌந்தரராஜன்!

மக்களிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயற்கையான வரவேற்பை தான் பெற்று வருகிறார். ஆனால் அதிகமான வரவேற்பு உள்ளது போல் முதலமைச்சர் கூறி வருகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

குன்றத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி

பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கனமழையால் வெள்ளப்பெருக்கு - தக்கலையில் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

காத்திருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்

தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.