WWE: கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார் கோல்டுபர்க்!
'ஸ்பியர்' (Spear) மற்றும் 'ஜாக்ஹாம்மர்' (Jackhammer) போன்ற தனித்துவமான ஷாட்களுக்கு புகழ்பெற்ற 58 வயதாகும் கோல்டுபர்க், தொழில்முறையான WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
'ஸ்பியர்' (Spear) மற்றும் 'ஜாக்ஹாம்மர்' (Jackhammer) போன்ற தனித்துவமான ஷாட்களுக்கு புகழ்பெற்ற 58 வயதாகும் கோல்டுபர்க், தொழில்முறையான WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பவுள்ளார். சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற மூவரும் வரும் ஜூலை 13ம் தேதி பூமிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 19-ல் AI ரோபோ ஒன்று போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் திரைப்படமான FAST & FURIOUS தொடர் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அதில் நடிப்பேன் என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.